145 குழந்தைகளை குறி வைத்த பாலியல் மிரட்டல் தொடர்பாக, Toronto தமிழர் ஒருவருக்கு அமெரிக்காவில் 33 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
40 வயதான ரமணன் பத்மநாதனுக்கு வழங்கப்பட்ட இந்த தண்டனையை, Columbia மாவட்டத்திற்கான அமெரிக்க அரச வழக்கறிஞர் அலுவலகம் அறிவித்துள்ளது.
கடந்த எட்டு ஆண்டுகளில் நூறுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு எதிராக இணைய வழி பாலியல் சுரண்டல் குற்றங்களில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்ட இவருக்கு 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஒரு பாலியல் மிரட்டல் திட்டத்தின் பின்னணியில் அவர் இருந்ததாக அமெரிக்க அரச வழக்கறிஞர்கள் கூறினர்.
அவர் மேலும் 10 ஆண்டுகள் கண்காணிப்பு விடுதலையில் இருக்கவும், பாலியல் குற்றவாளியாக பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இவர் கனடாவில் அனுபவித்து வரும் 12 ஆண்டுகால தண்டனையைத் தொடர்ந்து இந்தத் தண்டனையும் அமுல்படுத்தப்படும் என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
2021-இல், Toronto காவல்துறை இவரை கைது செய்து, அவர் மீது 93 பாலியல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது.
ஓராண்டு கழித்து அவர் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
அதன் பின்னர், 2025 December மாதம் அமெரிக்க அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.
அதன் ஒரு மாதத்தின் பின்னர் இரண்டு குற்றச்சாட்டுகளில் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
தொடர்புபட்ட செய்திகள்
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை விசாரணையில் தமிழருக்கு 9 வருட தண்டனை
