தேசியம்
செய்திகள்

கனடா எல்லைக்கான PCR சோதனை நடைமுறை தொடர்ந்தும் இருக்கும்:  துணைப் பிரதமர் Chrystia Freeland 

அமெரிக்காவுடனான கனடா எல்லைக்கான PCR சோதனை நடைமுறை தொடர்ந்தும் இருக்கும் என கனடாவின் துணைப் பிரதமர் Chrystia Freeland கூறினார்.

அமெரிக்கா தனது எல்லையை தடுப்பூசி பெற்ற கனேடியர்களுக்கு மீண்டும் திறக்கும் என்ற செய்தி வெளியான நிலையில், கனேடிய அரசு மீண்டும் நாட்டுக்குள் நுழைவதற்கான தனது COVID சோதனை தேவையை இரத்து செய்ய கோரிக்கைகள் வலுத்துள்ளது.

இந்த விடயம் குறித்து தற்போது Washington, D.C.யில் உள்ள துணைப் பிரதமர் Freeland இடம் கேள்வி எழுப்பப்பட்டது.

கனடியர்கள் மீண்டும் கனடாவுக்குள் நுழைய உகந்த  PCR சோதனை தேவை என Freeland இதற்கு பதிலளித்தார்

COVID தொற்றுக்கு எதிரான நடவடிக்கையாக பொது சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைகளைப் பின்பற்றுவது தொடர்ந்தும் கனடாவின் அணுகுமுறையாக இருக்கும் என Freeland தெரிவித்தார்

அதேவேளை COVID சோதனைத் தேவைகள் உட்பட தற்போதைய நடவடிக்கைகள் அனைத்தும் தொடர்ந்தும் அமலில் இருக்கும் என வியாழக்கிழமை வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், கனடா எல்லை சேவைகள் நிறுவனம் கனேடியர்களுக்கு நினைவூட்டியது.

Related posts

இந்தியாவுக்கு கனடா 10 மில்லியன் டொலர் நிதியுதவி: பிரதமர்

Gaya Raja

முதற்குடியினர் குழந்தைகள் நல இழப்பீடு ஒப்பந்தத்தை வெளியிட்ட அரசாங்கம்

Lankathas Pathmanathan

தனது booster தடுப்பூசியை அங்கீகரிக்குமாறு Health கனடாவிடம் கோரும் Moderna!

Gaya Raja

Leave a Comment