தேசியம்
செய்திகள்

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை விசாரணையில் தமிழருக்கு 9 வருட தண்டனை

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை விசாரணையில் Torontoவை சேர்ந்த தமிழருக்கு 9 வருடத்திற்கு அதிகமான தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

ரமணன் பத்மநாதன் என்ற தமிழர் இந்த குற்றச் சாட்டில் 9 வருடம், 7 மாதம் 20 நாட்கள் தண்டனை பெற்றுள்ளார்.

12 முதல் 15 வயதுக்குட்பட்ட 8 பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான 39 பாலியல் குற்றங்களில் தன் மீதான குற்றச்சாட்டை ரமணன் பத்மநாதன் கடந்த வருடம் October மாதம் 26ஆம் திகதி ஏற்றுக் கொண்டார்.

இந்த குற்றங்கள் April 1 2019 முதல் February 28, 2021 வரையிலான பல்வேறு காலகட்டங்களில் நிகழ்ந்துள்ளன.

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், பாதிக்கப்பட்டவர்களிடமும் சமூகத்திடமும் குற்றம் சாட்டப்பட்ட ரமணன் பத்மநாதன் தனது குற்றங்களுக்கு வருத்தமும் மன்னிப்பு கோரியுள்ளார்.

Related posts

மாகாண அளவிலான ஊரடங்கு உத்தரவை பரிசீலிக்கும் Ontario!

Gaya Raja

சுகாதார பராமரிப்பு பணியாளர் பற்றாக்குறைக்கு உதவ புதிய திட்டம்?

Lankathas Pathmanathan

முதற்குடியினருடன் இரண்டு முக்கிய ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்ட கனேடிய அரசாங்கம்

Gaya Raja

Leave a Comment