அகதிகள் மீள்குடியேற்ற திட்டத்திற்கு மேலதிக நிதியுதவி
அகதிகள் மீள்குடியேற்ற திட்டத்திற்கு மத்திய அரசாங்கம் மேலதிக நிதியுதவியை அறிவித்துள்ளது. குடிவரவு, அகதிகள், குடியுரிமை அமைச்சு செவ்வாய்க்கிழமை (13) இந்த அறிவித்தலை வெளியிட்டது. ஆறு மீள்குடியேற்ற திட்டங்களுக்கு கூடுதலாக 6.2 மில்லியன் டொலர்கள் வழங்கப்படவுள்ளது.
