தமிழ் மரபுத் திங்கள் கனடிய நாடாளுமன்றத்தில் கொண்டாடப்பட்டது.
பத்தாவது ஆண்டாக தமிழ் மரபுத் திங்கள் நிகழ்வுகள் செவ்வாய்க்கிழமை ( 27) கனடிய நாடாளுமன்றத்தில் வளாகத்தில் நடைபெற்றது.
ஆளும் Liberal அரசாங்கத்தின் மூன்று தமிழ் வம்சாவளியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து இந்த நிகழ்வை முன்னெடுத்தனர்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி, வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த், நாடாளுமன்ற உறுப்பினர் ஜுனிதா நாதன் ஆகியோர் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த நிகழ்வில் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
தமிழர் கலாச்சார நிகழ்வுகள் நிறைந்த இரவாக இந்த கொண்டாட்டம் அமைந்திருந்தது.
LJI Reporter ரம்யா சேது
