தேசியம்
செய்திகள்

ஒரு தசாப்த இடைவெளிக்குப் பின்னர் அமெரிக்க இராணுவப் பயிற்சியில் ஈடுபடும் கனடா?

12 வருட இடைவெளிக்குப் பின்னர், அமெரிக்க இராணுவப் பயிற்சியில் கனடா தனது நீர்மூழ்கிக் கப்பலை ஈடுபடுத்த உள்ளது.

இந்த ஆண்டு Hawaii கடற்பரப்பில் நடைபெறும் RIMPAC பயிற்சியில் கனடா ஒரு இராணுவ நீர்மூழ்கிக் கப்பலை ஈடுபடுத்தும் என தெரியவருகிறது.

இந்த எதிர்பாராத முடிவு, ஒரு தசாப்த இடைவெளிக்குப் பின்னராக கனடாவின் பங்கேற்பைக் குறிக்கிறது.

HMCS Corner Brook எதிர்வரும் நாட்களில் British Columbia கடற்படைத் தளத்தில் இருந்து புறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகின் மிகப்பெரிய கடற்படைப் பயிற்சியில், இந்த நீர்மூழ்கிக் கப்பல் இரண்டு கனடியப் போர்க்கப்பல்களுடன் இணையும் என கூறப்படுகிறது.

கனடாவின் நான்கு கப்பல்கள் கொண்ட கடற்படையில், HMCS Corner Brook மட்டுமே தற்போது செயல்பாட்டில் உள்ள ஒரே நீர்மூழ்கிக் கப்பலாகும்.

Related posts

கனடிய வீட்டின் சராசரி விலை 20 சதவீதம் குறைவு

Lankathas Pathmanathan

வாகனத் திருட்டு விசாரணையில் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீட்பு – நால்வர் கைது

Lankathas Pathmanathan

முதற்குடியினர் அனுபவித்த வன்முறை மீண்டும் நிகழாத எதிர்காலத்திற்காக பிரார்த்தனை செய்கிறேன்: திருத்தந்தை பிரான்சிஸ்

Leave a Comment