தேசியம்
செய்திகள்

York பிராந்திய காவல்துறை அதிகாரி காயமடைந்த சம்பவத்தில் தமிழர் மீதும் குற்றச் சாட்டு

York பிராந்திய காவல்துறை அதிகாரி ஒருவர் காயமடைந்த சம்பவத்தில் தமிழர் உட்பட மூன்று பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

சந்தேக நபர் ஒருவரைப் பின் தொடர்ந்த அதிகாரி ஒருவர் காயமடைந்ததை அடுத்து 40க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

திருடப்பட்ட வாகனத்தில் பயணித்த மூவரை நிறுத்த முற்பட்டபோது ஒருவர் அங்கிருந்து தப்பிச்  சென்றுள்ளார்.

17 வயதான தப்பிச் சென்றவரை தேடிச் சென்ற போது, அவர் காவல்துறை அதிகாரி ஒருவரை தாக்கியுள்ளார்.
தாக்கப்பட்ட காவல்துறை அதிகாரி உயிர் ஆபத்தற்ற காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதில் Markham வாசியான 18 வயதான கதீசன் அரவிந்தன் மீது குற்றச்சாட்டுக்கள் பதிவாகின.

Related posts

தேர்தலுக்கு தயாராகும் அரசியல் கட்சிகள்?

Lankathas Pathmanathan

புதிய நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தம் ஜெர்மானிய நிறுவனத்தின் வசம்

Lankathas Pathmanathan

Alberta மாகாண புதிய முதல்வர் பதவியேற்பு

Lankathas Pathmanathan

Leave a Comment