கனடியத் தமிழர் பேரவை (CTC) இரண்டு புதிய இயக்குநர் நியமனங்களை அறிவித்துள்ளது.
ஸ்ரீதரன் துரைராஜா, சுகீவ் கைலாயபதி ஆகியோர் கனடியத் தமிழர் பேரவையின் புதிய இயக்குநர்களாக நியமிக்கப்பட்டனர்.
புதன்கிழமை (20) இந்த நியமனம் ஒரு அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.
அடுத்த பொதுக்கூட்டமும், தேர்தல்களும் நடைபெறும் வரை வெற்றிடமாக உள்ள பதவிகளை நிரப்புவதாக இந்த நியமனங்கள் அமைவதாக CTC தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
