பயங்கரவாதம் தொடர்பான குற்றச்சாட்டில் Montreal-லில் ஒரு இளைஞரை கைது செய்துள்ளதாக RCMP தெரிவித்துள்ளது.
புதன்கிழமை (20) இந்த இளைஞரை கைது செய்ததாக RCMP கூறியது.
இந்த இளைஞர் இஸ்லாமிய அரசுக்கு விசுவாசமாக இருப்பதாகவும், பயங்கரவாதக் குழுவின் சார்பாக குறைந்தபட்சம் ஒரு தாக்குதலை நடத்த தயாராக இருந்ததாகவும் RCMP தெரிவித்தது.
இந்த இளைஞர் குறித்த விசாரணை கடந்த April மாதம் ஆரம்பித்தது என தெரிவித்த RCMP, இவரினால் பொதுமக்களுக்கு எப்போதும் ஆபத்து இருந்ததில்லை எனவும் கூறியது.
குற்றம் சாட்டப்பட்டவர் வியாழக்கிழமை (21) மூன்று குற்றச்சாட்டுகளின் பேரில் இளைஞர் நீதிமன்றத்தில் முன்னிலை படுத்தப்பட உள்ளார்.
இவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் எதுவும் இதுவரை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.
