அடுத்த தேர்தலில் பசுமைக் கட்சியை தலைமை தாங்கப் போவதில்லை என Elizabeth May தெரிவித்தார்.
கட்சி உறுப்பினர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.
பசுமைக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான அவர், 2008 முதல் 5 தேர்தல்களில் பசுமைக் கட்சியை வழி நடத்தியுள்ளார்.
அடுத்த தலைமைத்துவ மதிப்பாய்வின் முடிவுகள் வரை, தான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகவும் தலைவராகவும் நீடிக்க விரும்புவதாக அவர் கூறினார்.
தலைமை வாக்கெடுப்புக்கு சிறந்த நேரத்தை கட்சியின் நிர்வாகக் குழு முடிவு செய்யும் எனவும் Elizabeth May தெரிவித்தார்.
தற்போது நாடாளுமன்றத்தில் பசுமைக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே நாடாளுமன்ற உறுப்பினர் Elizabeth May என்பது குறிப்பிடத்தக்கது.
