February 16, 2025
தேசியம்
செய்திகள்

தேசிய அவசர நிலைக்கு சேமித்து வைத்திருந்த மருத்துவப் பொருட்களை உக்ரைனுக்கு வழங்கிய கனடா

தேசிய அவசர நிலைக்கு சேமித்து வைத்திருந்த மருத்துவப் பொருட்களை கனடா உக்ரைனுக்கு உதவ உபயோகித்துள்ளது.
ரஷ்யாவின் உக்ரைன் மீதான படையெடுப்பு ஆரம்பித்ததில் இருந்து கனடாவின் கையிருப்பில் இருந்து 375 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ உபகரணங்கள்  நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த வாரம் ஜெனீவாவில் முற்றுகையிடப்பட்ட உக்ரைனின் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான சர்வதேச தீர்மானத்தை நிறைவேற்ற கனடாவின் சுகாதார அமைச்சர் உதவினார்.
உலக சுகாதார சபை கூட்டத்தில் கனடா உக்ரைனுடன் இணைந்து வழங்கிய தீர்மானத்திற்கு தேவையான வாக்குகளைப் பெற உதவும் வகையில் அமைச்சர் Jean-Yves Duclos இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.

Related posts

“போரின் சாட்சியம்” நூலின் முதல் பிரதி கனடிய அமைச்சரிடம் கையளிப்பு!

Lankathas Pathmanathan

B.C. புதிய முதல்வராக David Eby பதவியேற்பு

Lankathas Pathmanathan

42 பேர் கைது – 173 துப்பாக்கிகள் பறிமுதல் – 442 குற்றச்சாட்டுகள் பதிவு

Leave a Comment