தேசியம்
செய்திகள்

கனடிய நாடாளுமன்றம் நோக்கிய வாகனப் பேரணி

கனடிய நாடாளுமன்றம் நோக்கிய ஒரு  வாகனப் பேரணி தமிழர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் புதன்கிழமை இந்த வாகனப் பேரணி நடைபெறவுள்ளது.

இலங்கை அரசை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துமாறு கனடிய அரசிடம் கோரும் வகையில் இந்த வாகனப் பேரணி முன்னெடுக்கப்படுகின்றது. Torontoவில் இருந்தும், Montrealலில் இருந்தும் காலை ஆரம்பமாகவுள்ள இந்த வாகனப் பேரணி மாலை Ottawaவை சென்றடைய ஏற்பாடாகியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் இணைத் தலைமை நாடுகளில் ஒன்றாக கனடா இருப்பதனால் தமிழ் மக்கள் சார்ந்து முடிவுகளை எடுப்பதற்கான தார்மீகக் கடமை கனடாவிற்கு உள்ளதாக இந்த  வாகனப் பேரணியின் ஏற்பாட்டாளர்கள் தெர்வித்துள்ளனர்.

Related posts

கத்திக் குத்துச் சம்பவத்தில் மரணமடைந்த தமிழர் அடையாளம் காணப்பட்டார்

Lankathas Pathmanathan

ஐந்து மாகாணங்களுடன் சுகாதார நிதி ஒப்பந்தங்களை கையெழுத்திட்ட மத்திய அரசாங்கம்

Lankathas Pathmanathan

நிபந்தனையற்ற சுகாதாரப் பாதுகாப்பு நிதி – முதல்வர்கள் பிரதமரிடம் கோரிக்கை !

Gaya Raja

Leave a Comment