போதைப்பொருள் மூலம் நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறைகளுடன் தொடர்புடைய இணையவழி வலைப் பின்னல்களை குறிவைக்கும் பன்னாட்டுச் சட்ட அமுலாக்க நடவடிக்கையில் கனடாவுடன் தொடர்புடைய 41 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
Project Medusa என பெயரிடப்பட்ட விசாரணையில் கனடாவுடன் தொடர்புடைய 41 பாதிக்கப்பட்டவர்கள், சந்தேகத்திற்குரிய குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக RCMP தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் மூலம் நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறைகளுடன் தொடர்புடைய இணையவழி வலைப் பின்னல்களை கண்டறிந்து முறியடிப்பதில் இத்திட்டம் கவனம் செலுத்துகிறது.
Europol அமைப்பின் ஆதரவு, பல கூட்டாளர் நாடுகளின் பங்கேற்புடன், இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகள் முன்னெடுக்கும் சர்வதேச முயற்சியில் கனடிய புலனாய்வாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக RCMP தெரிவித்துள்ளது.
