கனடா முழுவதும் எரிந்து கொண்டிருக்கும் ஆயிரம் வரையிலான காட்டுத்தீயை எதிர்கொள்ளும் பணியில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளதாக கனடிய பிரதமர் தெரிவித்தார்.
வரலாற்று ரீதியாக மிக மோசமான காட்டுத்தீ பருவங்களில் ஒன்றை கனடா தற்போது எதிர்கொண்டுள்ளது.
கனடிய தேசிய காட்டுத்தீ அறிக்கையின்படி, நாடளாவிய ரீதியில் சுமார் 1,000 காட்டுத்தீகள் எரிந்து கொண்டிருக்கின்றன.
5,000-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும், சுமார் 300 நீர் வீச்சு விமானங்கள், பிற விமானங்களுடன் இந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக பிரதமர் Mark Carney தெரிவித்துள்ளார்.
வடமேற்கு Ontario உட்பட நாடு முழுவதும் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ள மத்திய அரசு ஊழியர்களை, ஞாயிற்றுக்கிழமை (19) காலை Ottawa-வில் தான் சந்தித்ததாக Mark Carney தெரிவித்தார்.
தீவிர வெப்பநிலை , வறண்ட சூழல் ஆகியவை, இந்த ஆண்டை “கனடிய வரலாற்றிலேயே மிகத் தீவிரமான காட்டுத்தீ காலங்களில் ஒன்றாக” மாற்றியுள்ளதாக அவர் கூறினார்.
