நேபாளத்தில் உள்ள கனடியர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
கனடிய அரசாங்கம் நேபாளத்திற்கான பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது.
நேபாளத்தில் ஊழல் எதிர்ப்பு போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்த வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் கடந்த வாரம் ஊழல் எதிர்ப்பு போராட்டங்கள் ஆரம்பமானது.
இந்த நிலையில் அங்குள்ள கனடியர்கள் அதிக அளவு எச்சரிக்கையுடன் இருக்குமாறு கனடிய அரசாங்கம் வலியுறுத்துகிறது.
ஆர்ப்பாட்டங்களை, அரசாங்க கட்டிடங்களை தவிர்க்குமாறும், உள்ளூர் ஊடகங்களைத் தொடர்ந்து கண்காணிக்கவும் கனடியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
