தேசியம்
செய்திகள்

தமிழ் தேசத்தின் சுதந்திர அரசை அங்கீகரிக்க கோரி கனடாவில் வாகன பேரணி

தமிழ் தேசத்தின் சுதந்திர அரசை அங்கீகரிக்க கோரி கடந்த சனிக்கிழமை (16) கனடாவில் தமிழர்களால் வாகன பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

Brampton, Scarborough நகரங்களில் மதியம் ஆரம்பமான பேரணி Dundas சதுர்க்கம் வழியாக Toronto மத்திய பகுதியில் உள்ள அமெரிக்க துணை தூதரக அலுவலகத்தை மாலை சென்றடைந்தது.

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கவும், ஏழு தசாப்தங்களாக தமிழ் தேசத்தின் மேல் இடம்பெறும் ஆக்கிரமிப்பை அகற்றவும், ராஜபக்ச சகோதரர்கள் உட்பட அனைத்து இனப் படுகொலையாளர்களை ICCக்கு அனுப்பவும் கோரும் பதாகைகளை இந்த பேரணியில் கலந்து கொண்டவர்கள் பயன்படுத்தினர்.
தமிழ் தேசத்துக்கான சுதந்திர அரசு அங்கீகரிக்கப்படும் வரை இது போன்ற போராட்டங்கள் தொடரும் என இதில் கலந்து கொண்டவர்களினால் உறுதி எடுக்கப்பட்டது.

Related posts

Nova Scotia : 2 வார காலத்துக்கு பொது முடக்கம் அறிவிப்பு!!

Gaya Raja

Floridaவில் தொடர்மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் குறைந்தது நான்கு கனேடியர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம்!

Gaya Raja

Toronto நகர முதல்வராக தொடர John Tory தீர்மானம்?

Lankathas Pathmanathan

Leave a Comment