தேசியம்
செய்திகள்

தமிழ் இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் மற்றொரு தமிழ் இளைஞர் குற்றவாளியென தீர்ப்பு!

25 வயதான தமிழ் இளைஞர் சாரங்கன் சந்திரகாந்தன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் சரண்ராஜ் சிவக்குமார் குற்றவாளியாக நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.

2019ஆம் ஆண்டு Scarboroughவில் சாரங்கன் சந்திரகாந்தன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவத்தில் Stouffville வாசியான சரண்ராஜ் சிவக்குமார் கைது செய்யப்பட்டார்.

கை மோசக் கொலை குற்றச்சாட்டில் சரண்ராஜ் சிவக்குமார் குற்றவாளியாக நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டது.

அவர் மீது இரண்டாம் நிலை கொலை, கொலை முயற்சி ஆகிய வழக்குகள் முன்னர் பதிவு செய்யப்பட்டன .

பின்னர் இவர் மீதான குற்றங்கள் கை மோசக் கொலை என்ற நிலைக்கு தரம் இறக்கப்பட்டன.

சரண்ராஜ் சிவக்குமாருக்கான தண்டனை எதிர்வரும் January மாதம் 19ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.

Related posts

Crypto நாணய துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் மசோதா தோல்வி

Lankathas Pathmanathan

கனடாவில் நால்வர் இறந்த சம்பவம் குறித்த குற்றச்சாட்டில் இருவர் இந்தியாவில் கைது

Lankathas Pathmanathan

Ontario மாகாண அமைச்சர் தீடீர் பதவி விலகல்

Lankathas Pathmanathan

Leave a Comment