கனடாவில் கல்வி கற்றுவந்த இந்தியர் ஒருவர், முதியவர்களை குறிவைத்து நடத்தப்பட்ட பல மில்லியன் டொலர் மோசடித் திட்டம் தொடர்பான வழக்கில் தண்டிக்கப்பட்டார்.
மாணவர் அனுமதியில் கனடாவுக்கு வந்த இந்தியர் ஒருவர், முதியவர்களை குறிவைத்து முன்னெடுக்கப்பட்ட பல மில்லியன் டொலர் மோசடித் திட்டத்தில் ஈடுபட்டதற்காக அமெரிக்காவில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பணமோசடியில் ஈடுபட சதி செய்ததற்காக, 22 வயதான Roshan Shah என்பவருக்கு மத்திய நீதிமன்ற நீதிபதி 48 மாதங்கள் சிறை தண்டனை விதித்தார்.
Wisconsin மாநிலத்தின் கிழக்கு மாவட்டத்திற்கான அமெரிக்க அரச வழக்கறிஞர் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் இந்தத் தகவலை தெரிவித்தது.
Roshan Shah ஒரு இந்தியக் குடிமகன் என் நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.
மாணவர் அனுமதியில் கனடிய கல்லூரியில் கல்வி கற்று வந்தார், மோடி மூலம் ஈட்டப்பட்ட பணத்தைப் பெற்றுக் கொள்வதற்காக சுற்றுலா அனுமதியில் அமெரிக்காவிற்குள் நுழைந்தார் என்று நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்தது.
Roshan Shah கனடாவின் எந்த மாகாணத்தில் வசித்து வந்தார் என்பது குறித்தோ அல்லது அவர் எந்த உயர்கல்வி நிறுவனத்தில் பயின்று வந்தார் என்பது குறித்தோ அதிகாரிகள் குறிப்பிடவில்லை
அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 15 பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து Roshan Shah மொத்தம் 3.7 மில்லியன் அமெரிக்க டொலருக்கு அதிகமான தொகையை வசூலித்துள்ளார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Wisconsin மாநிலத்தின் New Berli பகுதியில், “மோடி மூலம் கிடைத்த பணத்தை சேகரிக்க முயன்ற போது 2025-ஆம் ஆண்டின் கோடை காலத்தில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
