Congo பயணித்த வெளிநாட்டவரை கனடா தற்காலிகமாக தடை செய்துள்ளது.
Ebola அபாயம் காரணமாக இந்த தற்காலிக தடை கனடிய அரசினால் நடைமுறைப்படுத்தப்படுள்ளது.
கனடாவின் பொது சுகாதார முகமையகம் ஞாயிற்றுக்கிழமை (19) இந்த அறிவிப்பை வெளியிட்டது.
இந்த புதிய விதி திங்கட்கிழமை (20) இரவு 11:59 மணிக்கு நடைமுறைக்கு வர உள்ளது.
கனடாவில் Ebola பரவுவதையும் தடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, கடந்த 21 நாட்களில் Congo ஜனநாயகக் குடியரசுக்கு சென்ற வெளிநாட்டினரை அனுமதிக்க கனடா மறுக்கிறது.
இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வணிக, தனியார் விமான நிறுவனங்கள், Congo பயணத்த வெளிநாட்டினரை கனடாவுக்கான விமானத்தில் ஏற அனுமதிக்க கூடாது எனவும் அறிவுறுத்தப்படுகிறது.
இந்த நடைமுறை மாற்றம் முன்னர் கனடா எடுத்த நிலைப்பாட்டில் இருந்து ஒரு மாற்றமாகும்.
Ebola பாதிப்புக்குள்ளான பகுதிகளிலிருந்து வரும் பயணிகள் 21 நாட்களுக்குத் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என கடந்த May மாதத்தில் கனடிய அரசாங்கம் வலியுறுத்தி இருந்தது.
அந்த தனிமைப்படுத்தல் நிபந்தனை தெற்கு சூடான், Uganda ஆகிய நாடுகளுக்கு பொருந்தினாலும், ஞாயிறன்று அறிவிக்கப்பட்ட பயணத் தடை நடவடிக்கையில், அந்த இரு நாடுகளில் உள்ளடங்கவில்லை.
திங்கள் இரவு நடைமுறைக்கு வரும் புதிய விதிமுறைகளும், May மாதத்தில் அமுல்படுத்தப்பட்ட விதிமுறைகளும் August 29 வரை அமுலில் இருக்கும்.
கடந்த 21 நாட்களுக்குள் Congo, தெற்கு சூடான் அல்லது Uganda பயணித்த கனடியக் குடிமக்கள், நிரந்தரக் குடியிருப்பாளர்கள், Indian Act இன் கீழ் பதிவு செய்யப்பட்ட நபர்கள் கனடாவிற்குள் நுழைய தொடர்ந்து அனுமதிக்கப்படுவார்கள்.
அவர்கள் கனடாவை வந்தடைந்ததும் உடல்நலப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, 21 நாட்களுக்கு தாங்களாகவே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டப்படுவார்கள்.
Congo, தெற்கு சூடான் அல்லது Uganda ஆகிய நாடுகளில் இருந்து சராசரியாக வாரந்தோறும் 350 பேர் கனடாவுக்கு வருகின்றனர் என கனடிய அரசாங்கம் தரவுகள் தெரிவிக்கின்றன.
இதில் பெரும்பாலான பயணிகள் Toronto, Montreal, Vancouver விமான நிலையங்களை வந்தடைகின்றனர்.
இந்த விமானப் பயணிகளில் சுமார் 60 சதவீதம் பேர் கனடியர்கள் அல்லது நிரந்தரக் குடியேறிகள் எனவும் 40 சதவீதம் பேர் வெளிநாட்டினர் எனவும் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
இதுவரை Ebola பரவலால் 2,181 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 864 உயிரிழப்புகளும் அடங்குகின்றன.
