வடக்கு Ontario-வில் காட்டுத்தீ கடுமையாக எரிந்து கொண்டிருக்கும் நிலையில், முதல்வர் Doug Ford Thunder Bay நகருக்கு பயணம் மேற்கொண்டார்.
வடக்கு Ontario காட்டுத்தீயில் இருந்து தப்பி வெளியேறிய பலர் தஞ்சம் புகுந்துள்ள Thunder Bay பகுதிக்கு முதல்வர் Doug Ford பயணம் மேற்கொண்டுள்ளார்.
அவசர கால நடவடிக்கை குறித்து மாகாண அரசாங்கம் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ள நிலையில், சனிக்கிழமை (18) Thunder Bay நகரில் உள்ள ஏனைய அரசு அதிகாரிகளுடன் Doug Ford இணைந்து கொண்டார்.
150-க்கும் மேற்பட்ட தீயணைப்பு குழுக்களும், 80-க்கும் மேற்பட்ட நீர் வீசும் விமானங்கள், உலங்குவானூர்திகள் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.
மக்களின் பாதுகாப்புக்காக தனது அரசாங்கம் எந்த செலவையும் எதிர்கொள்ள தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.
காட்டுத்தீ காரணமாக Ontario வடக்குப் பகுதியில் பல சமூகங்களைச் சேர்ந்த மக்கள் ஏற்கனவே அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் – அல்லது வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் சில சமூகங்கள் வெளியேற்றப்பட கூடிய சூழலுக்குத் தயாராகி வருகின்றன.
காட்டுத்தீயை எதிர்கொள்வதற்காக மாகாணம் ஒதுக்கியுள்ள நிதி, வளங்களின் அளவு குறித்து Doug Ford அரசாங்கம் தொடர்ந்து கடும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது.
Ontario மாகாணம் முழுவதும் சுமார் 200 காட்டுத்தீகள் எரிகின்றன.
இவை கடந்த ஆண்டு ஏற்பட்ட அனைத்து காட்டுத்தீக்களாலும் பாதிக்கப்பட்ட நிலப்பரப்பை விட அதிகமான நிலப்பரப்பை ஏற்கனவே எரித்துச் சாம்பலாக்கி உள்ளன.
Ontario மாகாணத்தையும் அமெரிக்காவின் சில பகுதிகளில் அபாயகரமான புகைக் கூட்டங்களை அது ஏற்படுத்தி வருகிறது.
