கனடிய காட்டுத்தீ புகை காரணமாக உலகக் கோப்பை இறுதிப் போட்டியை ஒத்திவைக்க அமெரிக்க ஜனாதிபதி தயங்கமாட்டார் என கனடாவுக்கான அமெரிக்கத் தூதர் தெரிவித்தார்.
2026 உலகக் கோப்பை இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை (19) அமெரிக்காவின் New Jersey மாநிலத்தில் நடைபெறுகிறது.
கனடாவில் ஏற்படும் காட்டுத்தீயினால் எழும் புகை New Jersey மாநிலத்தை தொடர்ந்து சூழ்ந்திருந்தால், இறுதிப் போட்டியை ஒத்திவைக்குமாறு கோருவதற்கு அமெரிக்க ஜனாதிபதி Donald Trump தயங்கமாட்டார் என Pete Hoekstra தெரிவித்துள்ளார்.
மாசுபாடு விளையாட்டு வீரர்களுக்கு அல்லது இரசிகர்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியதாக இருந்தால், போட்டியை நடத்த வேண்டாம் என முதலில் கூறப்போகும் நபர் அமெரிக்க ஜனாதிபதியாக இருப்பார் என கனடிய தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் Pete Hoekstra தெரிவித்தார்.
Spain, Argentina அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டிக்கு முன்னதாக, காற்றின் தரம் குறித்து FIFA அமைப்புடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
கனடாவில் ஏற்பட்ட காட்டுத் தீயின் புகை, அமெரிக்காவின் பெரும் பகுதிகளை மூடியுள்ளது.
இது 10 கோடிக்கும் அதிகமான அமெரிக்கர்களை பாதித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் கனடா மீது கூடுதல் வரிகளை விதிப்பது குறித்த அச்சுறுத்தல்களை Donald Trupm விடுத்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
