காட்டுத்தீ புகை தொடர்பாக கனடாவை அமெரிக்க ஜனாதிபதி கடுமையாகச் சாடினார்.
கனடா தனது காடுகளை முறையாகப் பராமரிக்காததற்கு நாங்கள் அவர்களை பொறுப்பாக்குகிறோம் என Donald Trump குறிப்பிட்டார்.
காட்டுத்தீ புகையினால் ஏற்படும் மாசுபாட்டிற்கான செலவை, கனடியப் பொருட்கள் மீது விதிக்கப்படும் வரிகளுடன் கட்டாயம் சேர்க்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி கூறினார்.
“அசுத்தமான, மாசடைந்த, ஆரோக்கியமற்ற காற்றால் அமெரிக்கா தேவையற்ற முறையில் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது” என குறிப்பிட்ட அவர், இந்தக் காற்றின் தரம் ஆபத்தானது, முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என வெள்ளிக்கிழமை Truth Social தளத்தில் பதிவிட்டார்.
இது வேண்டுமென்றே செய்யப்படும் அலட்சியமாகும் எனவும் இது ஆண்டுதோறும் நிகழும் ஒரு நிகழ்வாக மாறி, அமெரிக்காவிற்குப் பல பில்லியன் டொலர் இழப்பை ஏற்படுத்துவதாக அவர் கூறினார்.
காட்டுத்தீயை கையாண்ட விதம் குறித்து கனடாவை விமர்சித்த சமீபத்திய அமெரிக்க அரசியல்வாதி Donald Trump ஆவார்.
அமெரிக்காவின் வடக்கு மாநிலங்களில் காற்றின் தரத்தை மோசமடையச் செய்துள்ள காட்டுத்தீ புகைப் பிரச்சினையைக் கையாள்வதில் கனடா போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என இந்த வார ஆரம்பத்தில் Michigan மாநிலத்தின் சில மக்கள் பிரதிநிதிகள் குற்றம் சாட்டினர்.
கனடாவில் 900-க்கும் மேற்பட்ட காட்டுத்தீகள் எரிந்து கொண்டிருக்கின்றன.
903 காட்டுத்தீயில் 122 கட்டுப்பாடின்றி எரிந்து கொண்டிருக்கின்றன.
29 காட்டுத்தீகள் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளன.
மேலும் 73 காட்டுத்தீகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
