வளைகுடாப் பகுதி கப்பல்கள் மீதான ஈரானின் தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாதவை என கனடிய வெளிவிவகார அமைச்சர் கண்டித்தார்.
இந்தத் தாக்குதல்கள் நியாயமற்றவை எனவும் அனிதா ஆனந்த் குறிப்பிடுகிறார்.
சவுதி அரேபியாவில் கனடிய பிரதமர் Mark Carney பயணம் மேற்கொள்ளும் நிலையில், அனிதா ஆனந்த் வியாழக்கிழமை சவுதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சரை சந்தித்தார்.
அங்கு செய்தியாளர்களுடனான சந்திப்பில் பாரசீக வளைகுடா நாடுகளுக்கு கனடாவின் ஆதரவை அனிதா ஆனந்த் தெரிவித்தார்.
யுத்த நிறுத்தங்கள் எப்போதும் நிலையற்றவை என கூறிய அனிதா ஆனந்த், ஈரான் பொதுமக்களை குறிவைத்து தாக்குவது நியாயமற்றது எனவும் குறிப்பிடுகிறார்.
ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதை NATO உச்சி மாநாட்டில் பங்கேற்ற போது, கனடிய பிரதமர் அண்மையில் வரவேற்றார்.
ஈரான் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டு வருவதாக தெரிவித்த் Mark Carney, அமெரிக்காவின் எதிர்வினை பொருத்தமானது எனவும் விவரித்தார்.
