Ontario Mapleton கிராமப்புறத்தில் வெள்ளிக்கிழமை (12) நிகழ்ந்த விபத்தில் ஐந்து குழந்தைகள் உயிரிழந்தனர்.
இதில் ஆறு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
10 பேர் பயணித்த வாகனம் ஒன்றும், SUV வாகனமும் மோதிக்கொண்டதில், ஒரு பச்சிளங்குழந்தை, குழந்தைகளின் பெற்றோர், குழந்தைகளின் தாத்தா பாட்டி என நம்பப்படும் இரண்டு முதியவர்கள் உட்பட பலர் காயமடைந்ததாக புலனாய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதில் கொல்லப்பட்ட நான்கு சிறுமிகளும் ஒரு சிறுவனும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்களின் வயது 4, 6, 8, 10, 12 எனவும் Ontario மாகாண காவல்துறை தெரிவித்துள்ளது.
SUV வாகனத்தில் தனியாகப் பயணித்த அதன் ஓட்டுநர் படுகாயமடைந்தார்.
இறுதிச் சடங்கு ஏற்பாடுகளைச் செய்து வருவதாலும், மருத்துவமனையில் உள்ளவர்களை கவனித்து வருவதாலும், தங்களால் மேலதிக தகவல்களை வழங்க இயலவில்லை என குடும்ப உறுப்பினர் ஒருவர் உள்ளூர் ஊடகத்திற்கு ஞாயிற்றுக்கிழமை (14) தெரிவித்தார்.
இந்த விபத்து தொடர்பான முழுமையான சூழ்நிலைகளைக் கண்டறிய, மாகாண காவல்துறை தனது விசாரணையைத் தொடர்ந்து நடத்தி வருகிறது.
இந்த நிலையில் கிராமப்புற வீதிகளில் விபத்துக்களை தடுக்கும் நோக்கில், OPP ஒரு புதிய அதிரடி பாதுகாப்பு நடவடிக்கைக்குத் தயாராகி வருகிறது.
இந்த பாதுகாப்பு நடவடிக்கை Mapleton கிராமப்புற விபத்துக்கு முன்னரே திட்டமிடப்பட்டிருந்தது என OPPP ஊடகத் தொடர்பாளர் ஒரு மின்னஞ்சல் அறிக்கையில் தெரிவித்தார்.
