Philippines நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கனடா அனுதாபங்களை வெளிப்படுத்தியது.
இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ கனடா தயாராக உள்ளது என கனடிய வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் கூறினார்.
Philippines நிலநடுக்கத்தால் எந்தவொரு கனடியக் குடிமகனும் பாதிக்கப்பட்டதாக தகவல் இல்லை என கனடிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.
இந்த நிலநடுக்கம் கனடிய சமூகத்தைபேரழிவுக்கு உள்ளாக்கியது.
Philippines தெற்கை திங்கட்கிழமை (08) 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியதில், குறைந்தது 35 பேர் உயிரிழந்தனர் – மேலும் பலர் காயமடைந்தனர்.
இதில் பாதிக்கப்பட்ட கனடியர்களுக்கு உதவ தூதரக அதிகாரிகள் தயாராகவுள்ளதாக கனடிய வெளிவிவகார அமைச்சு கூறியது.
தவிரவும் கனடிய தூதரக அதிகாரிகள் உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதையும் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
