மும்பை தாக்குதலின் ‘முக்கியதாரி‘ என அழைக்கப்படும் நபரின் குடியுரிமையை இரத்து செய்ய கனடா முயல்வதாக தெரியவருகிறது.
2008-ஆம் ஆண்டு இந்தியாவின் தலைநகர் மும்பையில் நிகழ்த்த பயங்கரவாத தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர்.
இதில் முக்கிய பங்கு வகித்ததாக குற்றம் சாட்டப்பட்ட பாகிஸ்தானில் பிறந்த தொழிலதிபரின் குடியுரிமையை இரத்து செய்ய கனடிய அரசாங்கம் அழுத்தம் கொடுத்து வருகிறது.
Tahawwur Rana Hussain 2001-ஆம் ஆண்டு பெற்ற கனடிய குடியுரிமையை இரத்து செய்ய திட்டமிட்டுள்ளதாக குடிவரவு அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக Global News வெளியிட்ட ஆவணங்கள் சுட்டிக் காட்டுகின்றன.
65 வயதான Tahawwur Rana Hussain 1997-இல் கனடாவுக்கு குடிபெயர்ந்தார்.
மும்பை தாக்குதலுக்கு அவர் உதவியதான குற்றச்சாட்டின் பேரில் அவர் விசாரணைக்காக அவர் தற்போது இந்தியாவில் காவலில் உள்ளார்,
பயங்கரவாதத்திற்காக அல்லாமல், Tahawwur Rana Hussain தனது விண்ணப்பப் படிவத்தில் தவறான தகவல்களை வழங்கியதால் அவரது குடியுரிமையை இரத்து செய்யப்படுவதாக தனது முடிவில், கனடிய குடிவரவு, அகதிகள், குடியுரிமை அமைச்சு குறிப்பிடுகிறது.
2000-ஆம் ஆண்டு அவர் குடியுரிமைக்கு விண்ணப்பித்தபோது, கடந்த நான்கு ஆண்டுகளாக Ottawa, Toronto நகரங்களில் வசித்து வந்ததாகவும், ஆறு நாட்கள் மட்டுமே நாட்டிலிருந்து வெளியேறியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இருப்பினும், அவர் அந்த முழுமையான காலத்தையும் அமெரிக்காவின் Chicago-வில் கழித்திருப்பது RCMP விசாரணையில் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கனடிய பிரதமர் Mark Carney, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான உறவுகளை மீட்டெடுக்க முயற்சித்து வரும் நிலையில், மும்பை தாக்குதலின் ‘முக்கியதாரியின்‘ குடியுரிமையை பறிக்க குடிவரவு அதிகாரிகள் முன்னெடுக்கும் முயற்சி நீதிமன்றத்தில் முன் நகர்கிறது.
எதிர்வரும் வியாழக்கிழமை (26) இந்தியாவிற்கான தனது பயணத்தை Mark Carney ஆரம்பிப்பார் என கனடிய பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
2023-ஆம் ஆண்டில் கனடிய மண்ணில் ஒரு சீக்கிய தலைவரை கொன்றதாக முன்னாள் பிரதமர் Justin Trudeau இந்தியா மீது குற்றம் சாட்டியதை தொடர்ந்து மோசமடைந்த கனடா-இந்தியா உறவுகளில் இது குறிப்பிடத்தக்க மாற்றத்தையும் குறிக்கிறது.
தனது பயணத்தின் போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை Mark Carney சந்திக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
