Mexico-வில் திங்கட்கிழமை (23) ‘குறிப்பிடத்தக்க பாதுகாப்பு சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை என Mexico-வுக்காக கனடிய தூதர் தெரிவித்தார்.
மேற்கு Mexico-வின் Puerto Vallarta அருகே முன்னெடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கையின் போது பிரதான போதைப்பொருள் கும்பலின் தலைவர் Nemesio Ruben Oseguera Cervantes இராணுவத்தினரால் ஞாயிற்றுக்கிழமை (22) கொல்லப்பட்டார்.
இதையடுத்து Mexico-வின் பல மாநிலங்களில் வன்முறையும் அமைதியின்மையும் பரவியது.
இந்த வன்முறை, அமைதியின்மையை தொடர்ந்து நிலைமை கட்டுப்பபாட்டுக்குள் உள்ளதாக கனடிய தூதர் Cameron MacKay கூறினார்.
Mexico-வில் உள்ள கனடியர்கள் கனடிய வெளிவிவகார அமைச்சில் பதிவு செய்ய வேண்டும் என்ற வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்தின் கோரிக்கையை Cameron MacKay எதிரொலித்தார்.
உள்நாட்டு விமான சேவைகள் மீண்டும் ஆரம்பித்துள்ளதாகவும், கனடாவுக்கான சர்வதேச விமான சேவைகள் விரைவில் ஆரம்பிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் Cameron MacKay தெரிவித்தார்.
இந்தக் கருத்து வெளியான சில மணிநேரத்தில் தமது விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க உள்ளதாக WestJet அறிவித்தது.
இடைநிறுத்தப்பட்டுள்ள விமான சேவைகளை செவ்வாய்க்கிழமை (24) முதல் மீண்டும் ஆரம்பிக்கும் முடிவை WestJet திங்கள் இரவு அறிவித்தது.
Mexico-வில் தோன்றியுள்ள தற்போதைய பாதுகாப்பற்ற சூழ்நிலைக்கு மத்தியில் உள்ளூர் அதிகாரிகள் வழிகாட்டுதல்களை பின்பற்ற கனடியர்கள் அரசாங்கத்தினால் தொடர்ந்தும் வலியுறுத்தப்படுகின்றனர்.
தொடர்புபட்ட செய்தி
26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கனடியர்கள் Mexico-வில் சிக்கி உள்ளனர்? – தேசியம்
