தேசியம்
செய்திகள்

Quebec இல் 3 நகரங்கள் சிறப்பு கட்டுப்பாட்டுக்குள் – 4 பிராந்தியங்கள் சிவப்பு மண்டலத்திற்குள்!

COVID தொற்றின் தீவிரம் காரணமாக Quebecகின் மூன்று நகரங்கள் சிறப்பு கட்டுப்பாட்டுக்குள் செல்கின்றன.

நேற்று புதன்கிழமை மாகாண முதல்வர் François Legault இந்த அறிவித்தலை விடுத்தார். Quebec City, Lévis, Gatineau ஆகிய நகரங்கள் இந்த சிறப்பு கட்டுப்பாட்டுக்குள் செல்கின்றன. இந்த கட்டுப்பாடு இன்று வியாழக்கிழமை ஆரம்பமாகி 10 தினங்கள் நீடிக்கவுள்ளது. இதன் மூலம் பாடசாலைகளும், அனைத்து அத்தியாவசியமற்ற வணிகங்களும் மூடப்படவுள்ளன. மாணவர்கள் முழுநேரமாக இணையக் கல்வியை தொடரவுள்ளனர்.

அதேவேளை Quebecஇன் நான்கு பிராந்தியங்கள் மீண்டும் சிவப்பு மண்டலத்திற்குள் செல்லவுள்ளதாகவும் நேற்று புதன்கிழமை முதல்வர் தெரிவித்தார். அண்மையில் COVID கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட Outaouais, Quebec City, Chaudière-Appalaches, Bas-St-Laurent ஆகிய பகுதிகளே தொற்றின் பரவல் அதிகரிப்பு காரணமாக மீண்டும் சிவப்பு மண்டலத்திற்குள் செல்கின்றன. இன்று வியாழக்கிழமை இரவு 8 மணி முதல் இந்த மாற்றம் நடைமுறைக்கு வரவுள்ளது.

Related posts

Torontoவுக்கான பனிப் பொழிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Lankathas Pathmanathan

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் ; விசாரணையை ஆதரிக்க Conservative கட்சி கனேடிய அரசிடம் வலியுறுத்தல்

Gaya Raja

Alberta மத்திய அரசாங்கத்துடன் $24 பில்லியன் சுகாதார நிதியுதவி ஒப்பந்தத்தில் கையெழுத்து

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!