காணாமல் போனதாக இரண்டு வாரங்களாக தேடப்பட்டு வந்து பாதுகாப்பாக மீட்கப்பட்ட 14 வயதான Toronto இளம் சிறுமி குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த விசாரணையில் எவர் மீதும் எந்த குற்றவியல் வழக்கும் பதிவு செய்யப்படவில்லை எனவும் காவல்துறை வெள்ளிக்கிழமை (29) தெரிவித்துள்ளது.
சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னர் காணாமல் போனதை தொடர்ந்து தீவிர தேடுதலுக்கு உள்ளான 14 வயது சிறுமி வியாழக்கிழமை (28) பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.
Etobicoke நகரில் உள்ள ஒரு இல்லத்தில் இவர் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.
இந்த் சிறுமி காணாமல் போனது குறித்த விசாரணை முடிந்துவிட்டதாக காவல்துறை ஆரம்பத்தில் தெரிவித்திருந்த நிலையில், தற்போது இந்த வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருவதாக அவர்கள் தெளிவு படுத்தியுள்ளனர்.
இந்த சிறுமி கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பில், இவர் காணாமல் போனது குறித்து குற்றச் செயலுக்கு ஏதேனும் ஆதாரம் உள்ளதா என்பதைத் தீர்மானிக்க உதவும் வகையில் தங்கள் விசாரணை தொடரும் என காவல்துறை கூறியிருந்தது.
இந்த சிறுமி கண்டுபிடிக்கப்பட்ட வீட்டில் யார் வசித்தார்கள் என்பது குறித்து தாங்கள் தீவிரமாக விசாரித்து வருவதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்தி:
