சீன வெளியுறவு அமைச்சரின் கனடிய பயணத்தின் போது நடைபெறும் செய்தியாளர் சந்திப்பின்போது ஊடகங்கள் கேள்வி கேட்பதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
சீனாவின் வெளியுறவு அமைச்சர் Wang Yi மூன்று நாள் கனடிய பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை (29) காலை கனடிய வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்தை சந்தித்த அவர், மாலை பிரதமரை சந்திக்க ஏற்பாடாகியுள்ளது.
இரு நாட்டின் வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பின் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் நிகழ்வில் கேள்விகளை கேட்க ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதே கட்டுப்பாடு வெள்ளி பிற்பகல் நடைபெறும் கனடிய பிரதமருடனான சந்திப்பின் பின்னர் நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் அமுல்படுத்தப்படும் என கூறப்படுகிறது..
இந்த நடைமுறையை கனடாவின் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் Pierre Poilievre கண்டித்தார்.
பிரதமர் (Mark Carney) சீனாவுக்கு அதிருப்தி அளிக்கும் வகையில் எதையும் செய்ய மாட்டார் என நாடாளுமன்ற வளாகத்தில் Pierre Poilievre செய்தியாளர்களிடம் கூறினார்
10 ஆண்டுகளுக்கு முன்னர் சீன வெளியுறவு அமைச்சர் Wang Yi கனடாவுக்கு பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
இதன் போது அப்போது கனடிய வெளியுறவு அமைச்சராக இருந்த Stephane Dion-னுடன் இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பில், சீனாவில் மனித உரிமைகள் குறித்து ஒரு ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார்.
அந்த நேரம் இந்த நிருபரை Wang Yi கடுமையாக சாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
