தேசியம்
செய்திகள்

Toronto காவல்துறையினரால் இரண்டு தமிழர்கள் கைது

Toronto காவல்துறையினரின் துப்பாக்கிகள் குறித்த விசாரணையில் இரண்டு தமிழர்கள் கைதாகியுள்ளனர்.

கடந்த June மாதம் ஆரம்பமான Toronto காவல்துறையின் முக்கிய குற்றப்பிரிவு குற்றவியல் விசாரணையின் எதிரொலியாக இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டன.

Brampton நகரை சேர்ந்த 29 வயதான ஜான்சன் ஜெயகாந்தன் (Janson Jeyakanthan), 30 வயதான ஜெய்சன் ஜெயகாந்தன்  (Jayson Jeyakanthan) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.

ஜெய்சன் ஜெயகாந்தன் – Jayson Jeyakanthan

கைதான இருவரும் எதிர்வரும் திங்கட்கிழமை (20) தங்கள் மீதான குற்றச் சாட்டுகளை நீதிமன்றத்தில் எதிர்கொள்ளவுள்ளனர்.

இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் இதுவரை நிரூபிக்கப்படவில்லை.

இந்த துப்பாக்கி குறித்த விசாரணையில் மேலும் இருவர் காவல்துறையினரால் தேடப்பட்டு வருகின்றனர்.

Torontoவை சேர்ந்த 36 வயதான Jahmal Palmer, Torontoவை சேர்ந்த 29 வயதான Paul Richards ஆகியோரை கால்வதுறையினர் தேடி வருகின்றனர்.

Paul Richards
Jahmal Palmer

 

இவர்கள் இருவரின் புகைப்படங்களை வெளியிட்டுள்ள காவல்துறையினர் அவர்கள் குறித்து தகவல் அறிந்தவர்களை தங்களை தொடர்புகொள்ளுமாறு கோரியுள்ளனர்.

Related posts

Vancouver விமான நிலையத்திற்கு அருகில் தமிழர் சடலம் கண்டுபிடிப்பு

Lankathas Pathmanathan

Stanley Cup: இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்ற Edmonton Oilers

Ontario மாகாண Liberal கட்சியின் தலைமை பதவிக்கு மூன்றாவது வேட்பாளர்

Lankathas Pathmanathan

Leave a Comment