Brampton தமிழின அழிப்பு நினைவகத்தை சேதப்படுத்திய வழக்கில் ஒருவர் கைது கைது செய்யப்பட்டார்.
இந்தக் கைது Peel பிராந்திய காவல்துறையினரால் தேசியத்திடம் உறுதிப்படுத்தப்பட்டது.
கடந்த வருடம் திறந்து வைக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவகம் March 20-ஆம் சேதப்படுத்தப்பட்டது.
Chinguacousy பூங்காவில் உள்ள தமிழின அழிப்பு நினைவகம், இழிவான வாசகங்களால் சேதப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது
சம்பவ இடத்தில் அதிகாரிகள், நாசவேலையை உறுதி செய்து, உடனடியாக விசாரணையை Peel பிராந்திய காவல்துறையின் வெறுப்புக் குற்றப் பிரிவிடம் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய புலனாய்வாளர்கள், ஒரு இளம் குற்றவாளியை கைது செய்து அவர் மீது குற்றம் சுமத்தியுள்ளனர்.
காவல்துறையினரின் ஒரு முழுமையான விசாரணையை தொடர்ந்து, Brampton நகரைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவர், March 31-ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
$5,000-க்கும் அதிகமான சேதத்தை ஏற்படுத்திய இரண்டு குற்றச்சாட்டுகளின் கீழ் இவர் கைது செய்யப்பட்டார்.
இளைஞர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அடையாளம் வெளியிடப்படாத அவர் பின்னர் ஒரு திகதியில் Ontario நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என தெரியவருகிறது.
இளைஞர் குற்றவியல் நீதிச் சட்டத்தின் (Youth Criminal Justice Act – Y.C.J.A.) ஒரு பொதுவான விதிமுறை, குற்றம் சாட்டப்படும் ஒரு இளைஞரின் பெயரை வெளியிடுவதை தடை செய்கிறது.
இதனால், இந்த விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட நபரின் அடையாளம் வெளியிடப்படாமல் பாதுகாக்கப்படுகிறது.
ஆனாலும் இந்தச் சம்பவம் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள், வெறுப்புக் குற்றப் பிரிவின் புலனாய்வாளர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
தமிழின அழிப்பு நினைவகம் முன்னரும் சேதப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தச் செயலுக்கு Ontario மாகாண சபை உறுப்பினர்களான விஜய் தணிகாசலம், லோகன் கணபதி, Toronto நகரசபை உறுப்பினர் நீதான் சான், கனடிய தமிழர் தேசிய அவை, கனடிய தமிழர் பேரவை ஆகியோர் தமது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
இந்த நினைவகம் 2025-ஆம் ஆண்டு May மாதம் 10-ஆம் திகதி உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
ஸ்ரீலங்கா அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் தமிழின அழிப்பில் உயிரிழந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் நினைவாக இந்த தமிழின அழிப்பு நினைவகம் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புகைப்படங்கள்: NCCT
தொடர்புபட்ட செய்திகள்:
Brampton தமிழின அழிப்பு நினைவகம் மீண்டும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
Brampton தமிழின அழிப்பு நினைவகம் மீண்டும் சேதப்படுத்தப்பட்டது!
Brampton தமிழின அழிப்பு நினைவகம் மீண்டும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
மீண்டும் சேதப்படுத்தப்பட்ட Brampton தமிழின அழிப்பு நினைவகம்?
Brampton நகரில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவகம் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழின அழிப்பு நினைவகம் கனடாவில் திறந்து வைக்கப்பட்டது குறித்த விபரங்களை தனது Ottawa உயர்ஸ்தானிகர் மூலம் பெற ஸ்ரீலங்காவின் வெளிவிவகார அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
Brampton தமிழின அழிப்பு நினைவகம் குறித்த விபரங்களை கோரும் ஸ்ரீலங்காவின் வெளிவிவகார அமைச்சு?
தமிழினப் படுகொலை நினைவுச்சின்னம் Ontario மாகாணத்தின் Brampton நகரில் திறந்து வைக்கப்படவுள்ளது.
