தேசியம்
செய்திகள்

Brampton தமிழின அழிப்பு நினைவகம் குறித்த விபரங்களை கோரும் ஸ்ரீலங்காவின் வெளிவிவகார அமைச்சு?

தமிழின அழிப்பு நினைவகம் கனடாவில் திறந்து வைக்கப்பட்டது குறித்த விபரங்களை தனது Ottawa உயர்ஸ்தானிகர் மூலம் பெற ஸ்ரீலங்காவின் வெளிவிவகார அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

Ontario மாகாணத்தின் Brampton நகரில் உள்ள Chinguacousy பூங்காவில் தமிழின அழிப்பு நினைவகம் சனிக்கிழமை (10) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

ஸ்ரீலங்கா அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் தமிழின அழிப்பில் உயிரிழந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் நினைவாக இந்த நினைவகம் திறக்கப்பட்டது.

இந்த நிகழ்வு குறித்த விபரங்களை ஸ்ரீலங்காவுக்கான Ottawa உயர்ஸ்தானிகர் மூலம் அவசரமாக பெற ஸ்ரீலங்காவின் வெளிவிவகார அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

August 2024-இல் நடைபெற்ற இந்த நினைவகத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவின் பின்னர், இலங்கைக்கான கனடியத் தூதர் அழைக்கப்பட்டு ஸ்ரீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியினால் விளக்கம் கோரப்பட்டது.

இந்த நினைவகம் அமைக்கும் திட்டத்தை கைவிடுமாறு Brampton நகர முதல்வர் Patrick Brown-க்கு எழுதியுள்ள கடிதத்தில் கனடாவுக்கான இலங்கை துணைத் தூதர் Thushara Rodrigo வலியுறுத்தி இருந்தது கடந்த ஆண்டு வெளிச்சத்திற்கு வந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

காணாமல் போயுள்ள தமிழரை கண்டுபிடிக்க பொது மக்கள் உதவி கோரல்!

Lankathas Pathmanathan

இராணுவ தளபாடங்கள் அடங்கிய கனடிய விமானம் உக்ரைனை சென்றடடைந்தது

Lankathas Pathmanathan

எதிர்க்கட்சித் தலைவராக Pierre Poilievre மேற்கொள்ளும் முதலாவது சர்வதேச பயணம்

Lankathas Pathmanathan

Leave a Comment