கனடாவில் மக்கள் தொகை வரலாற்றில் மிகப்பெரிய சரிவு பதிவாகியுள்ளது.
கனடாவில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய மக்கள் தொகை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
கனடிய அரசின் அண்மைய குடியேற்றக் கொள்கை காரணமாக இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
கனடிய புள்ளிவிபரத் திணைக்களம் அதன் முதல் கட்ட மூன்றாம் காலாண்டு அறிக்கையை புதன்கிழமை (17) வெளியிட்டது.
இதில் October 1-ஆம் திகதி நிலவரப்படி கனடாவின் மக்கள் தொகை 41,575,585 என மதிப்பிடப்பட்டுள்ளது,
இது July முதல் October வரை சுமார் 76,000 வீழ்ச்சியை குறிக்கிறது.
நிரந்தரமற்ற குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட குறைவு இதற்கு முக்கிய காரணியாக கூறப்படுகிறது.
இந்த காலகட்டத்தில் நிரந்தரமற்ற குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை 176,479 -ஆக குறைந்துள்ளது.
இது கனடிய புள்ளிவிபரத் திணைக்கள பதிவுகள் ஆரம்பித்ததிலிருந்து மிகப்பெரிய சரிவு எனவும் கூறப்படுகிறது.
October 1, 2025 அன்று, கனடாவில் சுமார் 2.8 மில்லியன் நிரந்தரமற்ற குடியிருப்பாளர்கள் இருந்தனர்,
இது மொத்த மக்கள் தொகையில் 6.8 சதவீதம் ஆகும்.
July 1 அன்று, சுமார் மூன்று மில்லியன் நிரந்தரமற்ற குடியிருப்பாளர்கள் கனடாவில் பதிவாகியிருந்தனர்.
இது மொத்த சனத்தொகையில் 7.3 சதவீதமாகும்.
July முதல் October வரையிலான காலகட்டத்தில் 339,505 தற்காலிக அனுமதிகள் காலாவதியாகின.
புதிதாக 163,026 அனுமதிகள் மட்டும் வழங்கப்பட்டன.
இது பெருந்தொற்று காலத்தில் இருந்து முதல் காலாண்டு சரிவாகும்.
2020-ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் இருந்து கனடாவின் மக்கள் தொகை படிப்படியாக அதிகரித்து வருகிறது.
அப்போது மக்கள் தொகை 38,027,406 ஆக இருந்தது.
இது முந்தைய காலாண்டை விட சுமார் 1,200 குறைவானதாகும்.
LJI Reporter ரம்யா சேது
