ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தமிழர்கள் உயிர் இழந்த துயர விபத்துக்கான நீதிமன்ற விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றது.
Markham நகரில் 2022-ஆம் ஆண்டு October மாதம் 12-ஆம் திகதி நடைபெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
Markham – Elson சந்திப்புக்கு அருகில் ஒரே குடும்பத்தினர் பயணித்த வாகனத்தின் மீது பார ஊர்தி மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகன், மகள் என மூவர் மரணமடைந்தனர்.
இவர்கள் பயணித்த Acura வாகனத்துடன் பார ஊர்தி மோதியதில் வாகனத்தின் சாரதியான 21 வயதான பரீரன் புவனேந்திரன், முன் இருக்கையில் பயணித்த 52 வயதான ஸ்ரீரதி புவனேந்திரன், பின் இருக்கையில் பயணித்த 23 வயதான நிலுஷ்சனா புவனேந்திரன் ஆகியோர் உயிரிழந்தனர்.
2022 இல் நிகழ்ந்த இந்த விபத்துக்கான நீதித்துறை விசாரணை இப்போது Newmarket நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்று வருகின்றது.
இந்த வழக்கு விசாரணை March 2, திங்கட்கிழமை ஆரம்பித்து இந்த வாரமும் தொடர்கிறது.
இந்த நீதி விசாரணை இறுதிக் கட்டத்தை நெருங்கிவரும் நிலையில், March 9 திங்கட்கிழமை, எதிர் தரப்பு தங்கள் இறுதி வாதங்களை வழங்க உள்ளது.
அதைத் தொடர்ந்து March 10 ஆம் திகதி அரச தரப்பு தனது இறுதி வாதத்தை வழங்க உள்ளது.
இந்த விபத்தில் Vaughan நகரை சேர்ந்த பார ஊர்தி ஓட்டுநர் 46 வயதான Anthony BAGLIERI மீது குற்றச் சாட்டுகள் பதிவாகின.
