தேசியம்
செய்திகள்

புதிய நாடாளுமன்ற கூட்டத் தொடரை ஆரம்பித்து வைக்க கனடாவில் மன்னர்!

புதிய நாடாளுமன்ற கூட்டத் தொடரை ஆரம்பித்து வைப்பதற்கு மன்னர் மூன்றாம் சார்லஸ் திங்கட்கிழமை (26)  கனடா வந்தடைந்தார்.

மன்னர் அவரது துணைவி ராணி Camilla-வுடன் வரலாற்று சிறப்புமிக்க அரச சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு கனடா வந்தார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மன்னரின் முடிசூட்டு விழாவின் பின்னர், அரச குடும்பத்தினர் கனடாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணமாக இது அமைந்துள்ளது.

அரச தம்பதியினர் தமது கனடிய வருகையின் முதல் நாளில் ஆளுநர் நாயகம் Mary Simon, பிரதமர் Mark Carney ஆகியோருடன் சந்திப்புகளை மேற்கொண்டனர்.

முன்னதாக தலைநகர் Ottawa-வின் மையப்பகுதியில் உள்ள Lansdowne பூங்காவில் சமூக உறுப்பினர்களை அரச குடும்பத்தினர் சந்தித்தனர்.

மூன்று முதற்குடி அமைப்புகளின் தலைவர்களுடனும் அவர்கள் சந்திப்புகளை நடத்தினர்.

நாடாளுமன்றத்தின் புதிய அமர்வில் செவ்வாய்கிழமை (27) பங்கேற்கும் மன்னர் அரியணையில் இருந்து உரையாற்றவுள்ளார்.

1977-ஆம் ஆண்டு இரண்டாம் எலிசபெத் மகாராணி நாடாளுமன்ற அமர்வுகளை ஆரம்பித்து வைத்த பின்னர், கனடாவின் அரசத் தலைவர் நாடாளுமன்ற அமர்வை ஆரம்பிப்பது இதுவே முதல் முறையாகும்.

Related posts

கனடியத் தமிழர் கூட்டு – சிவஞானம் சிறீதரன் பிரத்தியேக சந்திப்பு!

Lankathas Pathmanathan

Ontarioவில் கடந்த வருடம் 100,000 டொலர்களுக்கு அதிகமான ஊதியம் பெற்றவர்களின் பட்டியல் வெளியானது!

Lankathas Pathmanathan

உக்ரைனுக்கு 9 மில்லியன் டொலர் இராணுவ உதவியை கனடா வழங்கியது

Lankathas Pathmanathan

Leave a Comment