Conservative தலைமைத்துவ மதிப்பாய்வை Pierre Poilievre வெற்றி பெற்றார்.
Conservative கட்சியின் தேசிய மாநாடு Calgary நகரில் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெற்ற தலைமைத்துவ மதிப்பாய்வில் Pierre Poilievre 87 சதவீதமான ஆதரவை பெற்றார்.
87.4 சதவீத வாக்குகளைப் பெற்று பிரதிநிதிகளின் ஒப்புதலைப் Pierre Poilievre பெற்றதாக Conservative கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
இந்த முடிவை ‘அதிகப் பெரும்பான்மை’ என Conservative கட்சியின் தலைமை அழைத்தது.
இதன் மூலம் September 2022 -இல் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டதிலிருந்து தனது தலைமைத்துவத்தின் மிகப்பெரிய சவாலை அவர் எளிதில் கடந்துள்ளார்.
முன்னதாக மாநாட்டில் உரையாற்றிய Pierre Poilievre கனடியர்களுக்காக போராடுவேன் என உறுதியளித்தார்.
மண்டபம் நிறைந்த கட்சி உறுப்பினர்கள் மத்தியில் தேர்தல் பிரச்சார பாணியிலான அவரது 50 நிமிட உரை, Liberal அரசின் கொள்கைகளை விமர்சிப்பதாக அமைந்தது.
கனடியர்கள் Liberal அரசாங்கத்தின் கீழ் வாழ முடியாது என Pierre Poilievre வெள்ளிக்கிழமை (31) இரவு தனது உரையில் கூறினார்.
அவரது உரையைத் தொடர்ந்து மாநாட்டில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் Pierre Poilievre கட்சித் தலைவராக நீடிக்க வேண்டுமா என்பது குறித்து வாக்களித்தனர்.
2,500-க்கும் மேற்பட்ட கட்சி ஆதரவாளர்கள் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொண்டனர்.
இதில் Pierre Poilievre 87.4 சதேவீதமான ஆதரவைப் பெற்றார் என சனிக்கிழமை (31) அதிகாலை அறிவிக்கப்பட்டது.
தகுதியுள்ள சுமார் 95 சதவீத வாக்காளர்கள் வாக்குகளை பதிவு செய்தனர் என கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார்.
தலைமைத்துவ மதிப்பாய்வு ஒரு பொதுத் தேர்தல் தோல்வியின் பின்னர் முன்னெடுக்கப்படும் Conservative கட்சி மதிப்பாய்வின் ஒரு பகுதியாகும்.
கடந்த April மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் Pierre Poilievre தலைமயிலான Conservative கட்சி தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
LJI Reporter ரம்யா சேது
