தேசியம்
செய்திகள்

அவசரகாலச் சட்டத்தை அரசாங்கம் பயன்படுத்தியது நியாயமற்றது: மேன்முறையீட்டு நீதிமன்றம்

Freedom Convoy வாகனத் தொடரணி போராட்டங்களின் போது அவசரகாலச் சட்டத்தை அரசாங்கம் பயன்படுத்தியது நியாயமற்றது என மேன்முறையீட்டு நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.

நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் போராட்டங்களை அடக்க அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்துவதற்கு Liberal அரசாங்கத்திடம் நியாயமான காரணங்கள் இருக்கவில்லை என மத்திய மேன்முறையீட்டு நீதிமன்றம் கூறுகிறது.

இந்த முடிவை மேன்முறையீட்டு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (16) அறிவித்தது.

January, February 2022 மாதங்களில் சுமார் மூன்று வாரங்களுக்கு, Ottawa-வின் மையப் பகுதி போராட்டக்காரர்களால் நிரம்பியிருந்தது.

இதில் நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள தெருக்களில் போக்குவரத்தை தடுத்த பெரிய Truck வாகனங்களும் அடங்கின.

LJI Reporter ரம்யா சேது

Related posts

Bramptonனில் தமிழ் இனவழிப்பு நினைவுத்தூபி!

Lankathas Pathmanathan

வேலையற்றோர் விகிதத்தில் மாற்றம் இல்லை!

Lankathas Pathmanathan

முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வை இரத்து செய்தது CTC!

Lankathas Pathmanathan

Leave a Comment