ரஷ்யாவுக்கு எதிராக கனடிய வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் மேலதிக தடைகளை அறிவித்தார்.
G7 நாடுகளைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர்கள் Ontario மாகாணத்தின் Niagara பிராந்தியத்தில் சந்தித்தனர்.
ஏழு நாடுகளின் உயர்மட்ட தூதர்களை அனிதா ஆனந்த் புதன்கிழமை (12) வரவேற்றார்.
இரண்டு நாள் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க ஆஸ்திரேலியா, பிரேசில், இந்தியா, மெக்சிகோ, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களையும் அனிதா ஆனந்த் அழைத்துள்ளார்.
உக்ரைனின் மின் கட்டமைப்பை குறிவைத்து ரஷ்யா மீண்டும் தாக்குதல் நடத்துவது குறித்து, G7 வெளியுறவு அமைச்சர்களிடம் உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் புதன்கிழமை விபரங்களை தெரிவித்தார்.
குளிர்காலம் நெருங்கி வரும் நிலையில், ரஷ்ய தாக்குதல்கள் உக்ரைனில் மின் தடையை ஏற்படுத்தியுள்ளன.
இந்த நிலையில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆளில்லாத விமானம், இணையத் தாக்குதல்களுக்கு காரணமானவர்களை கனடாவின் புதிய தடைகள் குறிவைக்கின்றன.
