கனடாவிற்குள் அனுமதிக்கும் தற்காலிக குடியிருப்பாளர்கள் எண்ணிக்கையை குறைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
வெளிநாட்டவர்களுக்கு வழங்கும் தற்காலிக குடியிருப்பு அனுமதி எண்ணிக்கையை கணிசமாகக் குறைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
செவ்வாய்க்கிழமை சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் இந்த விபரம் வெளியானது.
தற்காலிக குடியிருப்பாளர்கள் வருகையை நிலையான அளவுக்கு கொண்டு வருவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது என நிதியமைச்சர் François-Philippe Champagne கூறினார்.
அடுத்த ஆண்டு 385,000 தற்காலிக குடியிருப்பாளர்களை அனுமதிக்க இலக்கு வைத்துள்ளதாக அவர் அறிவித்தார்.
இது 2025-ஆம் ஆண்டு இலக்கை விட 43 சதவீதம் குறைவாகும்.
2026-இல் 385,000 பேருக்கு மட்டுமே தற்காலிக குடியிருப்பு அனுமதி வழங்கப்படவுள்ளது.
கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட குடியேற்றத் திட்டத்துடன் ஒப்பிடும்போது 2026-ஆம் ஆண்டிற்கான இலக்கு கால் பங்கு குறைந்துள்ளது.
2027, 2028-ஆம் ஆண்டுகளில், வருடாந்தம் 370,000 பேருக்கு மட்டும் தற்காலிக குடியிருப்பு அனுமதி வழங்கப்படவுள்ளது.
COVID தொற்று காலத்தில் வேகமாக அதிகரித்த தற்காலிக குடியிருப்பாளர்கள் வருகையை, முன்னாள் பிரதமர் Justin Trudeau அரசாங்கம் குறைக்க ஆரம்பித்தது.
Mark Carney பிரதமராக பதவி ஏற்பதற்கு முன்பே, கனடாவின் மக்கள் தொகையில் தற்காலிக குடியிருப்பாளர்கள் பங்கைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட திட்டங்களை Liberal அரசாங்கம் முன்னெடுத்திருந்தது.
