தேசியம்
செய்திகள்

முதற்குடி மக்களின் உரிமைகள் தொடர்பான ஐ.நா.பிரகடனத்துடன் கனேடிய சட்டத்தை இணைக்கும் மசோதா நிறைவேறியது

முதற்குடி மக்களின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் பிரகடனத்துடன் கனேடிய சட்டத்தை இணைக்க முற்படும் மசோதாவை புதன்கிழமை Senate நிறைவேற்றியுள்ளது.

C-15 எனப்படும் இந்த மசோதா 61 க்கு  10 என்ற வாக்கு வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் இந்த மசோதா சட்டமாக மாறுகிறது.

இந்த மசோதா பெரும்பாலும் முதற்குடி  மக்களின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் பிரகடனம்,சட்டத்திற்குள் கொண்டுவருவதாக விவரிக்கப்படுகிறது. இது கனேடிய சட்டத்தில் அறிவிப்பின் பல்வேறு சரத்துக்களை நேரடியாக செயல்படுத்தாது. மாறாக, அவை செயல்படுத்த படுவதற்கான ஒரு கட்டமைப்பை அது நிறுவும்.

இந்த மசோதா சட்டமானதன் மூலம் பிரதமர் Justin Trudeauவின் தேர்தல் உறுதிப்பாடு ஒன்று  நிறைவேறுகிறது.

Related posts

2025ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு ஆண்டும் 500,000 புதிய குடிவரவாளர்களுக்கு அனுமதி

Lankathas Pathmanathan

Ontario மாகாண சபைத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற Progressive Conservative!

Lankathas Pathmanathan

COVID விரைவு சோதனைகளை கொள்வனவு செய்வதற்கு 2.5 பில்லியன் மதிப்புள்ள மசோதா

Lankathas Pathmanathan

Leave a Comment