உண்மைக்கும் நல்லிணக்கத்திற்குமான தேசிய நாளின் ஐந்தாவது ஆண்டு நிகழ்வொன்றில் பிரதமர் Mark Carney கலந்து கொண்டார்.
உண்மைக்கும் நல்லிணக்கத்திற்குமான தேசிய நாளின் ஐந்தாவது ஆண்டை குறிக்கும் வகையில் நாடாளுமன்ற வளாகத்தில் செவ்வாய்க்கிழமை (30) நிகழ்வொன்று நடைபெற்றது.
பிரதமர் தவிர ஆளுநர் நாயகம் Mary Simon உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் பிரார்த்தனைகள், இசை நிகழ்ச்சிகள், உரைகள் இடம்பெற்றன.
குடியிருப்பு பாடசாலை முறை போன்ற அரசாங்கத்தின் அத்துமீறலை முடிவுக்குக் கொண்டுவர ஒரு ஊடக அறிக்கையில் Conservative தலைவர் Pierre Poilievre உறுதியளித்தார்.
நல்லிணக்கத்தை யதார்த்தமாக்க அரசாங்கம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என NDP நாடாளுமன்ற உறுப்பினர் Lori Idlout அழைப்பு விடுத்தார்.
1857 முதல் 1996 வரையிலான காலத்தில், 150,000 முதற்குடி மாணவர்கள் தேவாலயத்தால் நடத்தப்படும், அரசாங்க நிதியுதவி பெறும் பாடசாலைகளில் இணைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்த பாடசாலைகளில் கல்வி கற்கும் போது சுமார் 6,000 சிறுவர்கள் இறந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும் இறந்தவர்களின் உண்மையான எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
