தேசியம்
செய்திகள்

சுதந்திரத் தொடரணி காலத்தில் Ottawa காவல்துறை மீது 400க்கும் மேற்பட்ட புகார்கள்

சுதந்திரத் தொடரணி காலத்தில் Ottawa காவல்துறை அதிகாரிகள் மீது 400க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகியுள்ளன.

Ottawa காவல்துறை வாரியத்தின் 2022 ஆண்டு அறிக்கையில் இந்த தகவல் வெளியானது.

பொது புகார்கள் முந்தைய ஆண்டை விட இரு மடங்கு அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.

காவல்துறையினரின் நடத்தை குறித்து 94 சதவீதம் அதிக புகார்கள் 2022இல் பதிவாகியுள்ளதை இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

சுதந்திரத் தொடரணி போராட்டங்களில் ஈடுபட்டவர்களை மோசமாகக் கையாண்டதற்காக Ottawa காவல்துறை கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

Related posts

வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் கனேடியர்கள் Monkeypox முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்!

Lankathas Pathmanathan

Quebecகில் ஒவ்வொருவருக்கும் $500 கொடுப்பனவு

Lankathas Pathmanathan

கனேடிய தங்க மகன் De Grasse!

Gaya Raja

Leave a Comment