கனடாவின் வெளியுறவு அமைச்சர் அமெரிக்க வெளியுறவு செயலாளரை சந்தித்தார்.
கனடிய வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த், அமெரிக்க வெளியுறவு செயலாளர் Marco Rubio ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு வியாழக்கிழமை (21) நடைபெற்றது.
Washington நகரில் நடைபெற்ற இந்த சந்திப்பு இருவருக்கும் இடையிலான முதல் அதிகாரப்பூர்வமாக சந்திப்பாகும்.

ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளை உள்ளடக்கியதாக இந்த சந்திப்பு அமைந்திருந்தது.
Haiti-யின் பாதுகாப்பு, காசாவில் அமைதிக்கு Hama-சின் தொடர்ச்சியான தடைகளை சமாளித்தல் ஆகியனவும் இந்த சந்திப்பில் உரையாடப்பட்டன.
கனடா-அமெரிக்க உறவு குறித்து இருவரும் பேசியதாக கனடிய வெளியுறவுத்துறை கூறியது.
