Markham நகரசபையின் ஏழாம் வட்டார இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு இதுவரை ஏழு வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதில் மூன்று தமிழர்களும் அடங்குகின்றனர்.
Pickering–Brooklin நாடாளுமன்ற உறுப்பினராக ஜுனிதா நாதன் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து வெற்றிடமாக உள்ள Markham நகரசபையின் ஏழாம் வட்டார நகரசபை உறுப்பினர் இடத்தை நிரப்ப இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு June 30-ஆம் திகதி முதல் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
இதில் மூன்று தமிழர்கள் இதுவரை வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
கிள்ளி செல்லையா, ஆரணி முருகானந்தன், வால் புருஷோத்தமன் ஆகிய தமிழர்கள் இதுவரை வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
தகுதியுள்ளவர்கள் August 15, 2025 பிற்பகல் 2 மணி வரை வேட்பாளராக பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.
இந்த இடைத் தேர்தல் வாக்களிப்பு September 29-ஆம் திகதி நடைபெறவுள்ளது.
முன்கூட்டிய வாக்களிப்பு September 26, 27, 28-ஆம் திகதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இடைத் தேர்தலை நடத்துவதற்கான செலவு $300,000 என மதிப்பிடப்படுகிறது.
