கறுப்பு July கொடுமைகளில் பாதிக்கப்பட்டவர்கள், உயிர் பிழைத்தவர்களை நினைவு கூர்வதில் கனடிய தமிழர்களுடன் இணைந்து கொள்வதாக பிரதமர் Mark Carney தெரிவித்தார்.
கறுப்பு July நினைவு நிறைவையொட்டி கனடிய பிரதமர் Mark Carney அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
இலங்கை வரலாற்றில் கறுப்பு July ஒரு துயரமான அத்தியாயமாகவே உள்ளது என அந்த அறிக்கையில் பிரதமர் குறிப்பிட்டார்.
கனடிய தமிழர்களின் ஆதரவால் உந்தப்பட்டு, 1,800-க்கும் மேற்பட்ட தமிழர்களை துன்புறுத்தலில் இருந்து தப்பும் வகையில் வரவேற்க கனடா 1983-ஆம் ஆண்டு சிறப்பு நடவடிக்கை திட்டத்தை செயல்படுத்தியதை தனது அறிக்கையில் Mark Carney குறிப்பிட்டார்.
அர்த்தமுள்ள நீதி, பொறுப்புக்கூறலுடன் கூடிய உலகைக் கட்டியெழுப்புவதற்கான பணியை கனடா முன்னெடுக்கும் என அந்த அறிக்கையில் பிரதமர் உறுதிப்படுத்தினார்
2022-ஆம் ஆண்டு, கனடா நாடாளுமன்றம் May 18-ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக ஒருமனதாக அறிவித்ததை கனடிய பிரதமரின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
