தேசியம்
செய்திகள்

பிரதமருக்கும் Quebec முதல்வருக்கும் இடையிலான சந்திப்பு இரத்து

கனடிய பிரதமருக்கும் Quebec முதல்வருக்கும் இடையில் வெள்ளிக்கிழமை (16) நடைபெற இருந்த சந்திப்பு இரத்து செய்யப்பட்டது.

Justin Trudeauவுக்கும் François Legaultடிக்கும் இடையிலான இந்த சந்திப்பு Montreal நகரில் நடைபெற ஏற்பாடாகியிருந்தது.

கடந்த சில நாட்களாக Ontario, Quebec உட்பட பல மாகாணங்களில் தொடரும் பனிப்புயல் காரணமாக இந்த சந்திப்பு இரத்து செய்யப்பட்டது.

சுகாதார இடமாற்றங்கள், குடியேற்றம் போன்ற விடயங்கள் குறித்து இந்தச் சந்திப்பில் இரு தலைவர்களும் விவாதிக்க இருந்தனர்

இந்த நிலையில் இருவரும் தொலைபேசியில் உரையாடுவார்கள் என தெரிவித்த பிரதமரின் பேச்சாளர், பின்னர் ஒரு நாளில் நேரடி சந்திப்பு ஏற்பாடாகும் என கூறினார்.

Related posts

பாடசாலைகளை விடுமுறைக்கு பின்னர் மீண்டும் திறப்பது குறித்த முடிவுகள்

Lankathas Pathmanathan

West Edmonton வணிக வளாக துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயம்

Lankathas Pathmanathan

வேலை நிறுத்த வாக்களிப்பில் ஈடுபடவுள்ள கனடிய எல்லை பாதுகாப்பு தொழிலாளர்கள்

Gaya Raja

Leave a Comment