தேசியம்
செய்திகள்

மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் கையாண்ட விதம் “சர்வதேச சட்ட மீறல்”: Mark Carney

காசாவில் மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் கையாண்ட விதம் “சர்வதேச சட்ட மீறல்” என பிரதமர் Mark Carney கூறினார்.

காசாவில் வேகமாக மோசமடைந்து வரும் மனிதாபிமான பேரழிவைத் தடுக்க இஸ்ரேல் அரசாங்கம் தவறியதை கனடா கண்டிக்கிறது.

பொதுமக்களுக்கான மனிதாபிமான உதவிகள் தடையின்றி சென்றடைய அனுமதிக்க வேண்டும் என கனடிய வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்தார்.

இரு நாடுகள் தீர்வு குறித்து கவனம் செலுத்தும் ஐ.நா. மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அடுத்த வாரம் New York நகரம் செல்வதாக அனிதா ஆனந்த் கூறினார்.

உடனடி போர் நிறுத்தம் அவசியம் என தெரிவித்த அனிதா ஆனந்த் பணயக் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் எனவும் கூறினார்.

Related posts

கனடாவில் ஒரே நாளின் 40 ஆயிரத்தை அண்மித்த COVID தொற்றுகள்

Lankathas Pathmanathan

Ontarioவின் சில பகுதிகளில் வார இறுதியில் 80 CM வரை பனிப்பொழிவு

Lankathas Pathmanathan

கனடா எல்லைக்கான PCR சோதனை நடைமுறை தொடர்ந்தும் இருக்கும்:  துணைப் பிரதமர் Chrystia Freeland 

Gaya Raja

Leave a Comment