தேசியம்
செய்திகள்

மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் கையாண்ட விதம் “சர்வதேச சட்ட மீறல்”: Mark Carney

காசாவில் மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் கையாண்ட விதம் “சர்வதேச சட்ட மீறல்” என பிரதமர் Mark Carney கூறினார்.

காசாவில் வேகமாக மோசமடைந்து வரும் மனிதாபிமான பேரழிவைத் தடுக்க இஸ்ரேல் அரசாங்கம் தவறியதை கனடா கண்டிக்கிறது.

பொதுமக்களுக்கான மனிதாபிமான உதவிகள் தடையின்றி சென்றடைய அனுமதிக்க வேண்டும் என கனடிய வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்தார்.

இரு நாடுகள் தீர்வு குறித்து கவனம் செலுத்தும் ஐ.நா. மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அடுத்த வாரம் New York நகரம் செல்வதாக அனிதா ஆனந்த் கூறினார்.

உடனடி போர் நிறுத்தம் அவசியம் என தெரிவித்த அனிதா ஆனந்த் பணயக் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் எனவும் கூறினார்.

Related posts

இலங்கை உட்பட அனைத்து நாடுகளிலும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் அவதானமாக உள்ளோம் – கனடியப் பிரதமர் Justin Trudeau

thesiyam

Johnson & Johnson தடுப்பூசிகளால் ஆபத்து: Health கனடா எச்சரிக்கை!

Gaya Raja

நான்காவது அலைக்கு மத்தியில் பொதுத் தேர்தலை பாதுகாப்பாக நடத்தலாம்!

Gaya Raja

Leave a Comment