தேசியம்
செய்திகள்

செம்மணி படுகொலை: நீதி கோரி நூற்றுக் கணக்கானோர் Toronto-வில் ஆர்ப்பாட்டம்!

செம்மணி படுகொலைகளுக்கு நீதி கோரி Toronto-வில் நடைபெற்ற கவன ஈர்ப்பு  ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

மத்திய Toronto-வில் மக்கள் அதிகம் கூடும் Dundas சதுக்கத்தில் இந்த கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஞாயிற்றுக்கிழமை (6) பிற்பகல் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் செம்மணி படுகொலைகளுக்கு நீதி வேண்டி குரல் எழுப்பப்பட்டது.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்ற இந்தப் போராட்டத்தில் நீதி கோரும் பதாதைகளை பலரும் ஏந்தியிருந்தனர்.

செம்மணியில் புதைக்கப்பட்டோர், காணாமல் ஆக்கப்பட்டோர், தமிழ் மக்களுக்கு எதிராக தொடர்ச்சியாக இடம்பெறும் தமிழ் இனவழிப்பிற்கு சர்வதேச நீதி வேண்டி தாயகத்தில்  முன்னெடுக்கப்படும் தொடர்ச்சியான  கவன ஈர்ப்பு போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக இந்த கண்டன போராட்டம்  இடம்பெற்றது.

Related posts

Ontario Liberal தலைவர் Bonnie Crombie பதவி விலகல்!

Lankathas Pathmanathan

பிரதமரை பதவி விலகுமாறு கோரவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள்?

Lankathas Pathmanathan

84 வேட்பாளர்கள் போட்டியிடும் இடைத் தேர்தல்!

Lankathas Pathmanathan

Leave a Comment