தேசியம்
செய்திகள்

Markham நகரசபையின் 7-ஆம் வட்டார இடைத் தேர்தலில் போட்டியிட மற்றுமொரு தமிழர் ஆர்வம்!

Markham நகரசபையின் 7-ஆம் வட்டார இடைத் தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தை மற்றுமொரு தமிழர் வெளிப்படுத்தியுள்ளார்.

Markham நகர நீண்டகால குடியிருப்பாளராக தன்னை அடையாளப்படுத்தும் ஆரணி முருகானந்தன் இந்த இடைத் தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Markham நகரசபையின் 7-ஆம் வட்டார இடைத் தேர்தல் வேட்புமனு June மாதம் 30-ஆம் திகதி முதல் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

இந்த இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை முதலாவது வேட்பாளராக கிள்ளி செல்லையா தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Pickering–Brooklin நாடாளுமன்ற உறுப்பினராக ஜுனிதா நாதன் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து வெற்றிடமாக உள்ள 7-ஆம் வட்டார நகரசபை உறுப்பினர் இடத்தை நிரப்ப இந்த இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இந்த இடைத் தேர்தல் வாக்களிப்பு September 29-ஆம் திகதி நடைபெறவுள்ளது.

முன்கூட்டிய வாக்களிப்பு September 26, 27, 28-ஆம் திகதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியுள்ளவர்கள் August 15, 2025 பிற்பகல் 2 மணி வரை வேட்பாளராக பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.

இந்த இடைத் தேர்தலை நடத்துவதற்கான செலவு $300,000 என மதிப்பிடப்படுகிறது.

Related posts

மத்திய அரசின் குறைந்தபட்ச ஊதியம் உயர்கிறது!

புதிய வீடு கட்டுமான முயற்சிகளுக்கு $600 மில்லியன் நிதி?

Lankathas Pathmanathan

வாகன நிதி மோசடிகள் குற்றச்சாட்டில் நான்கு தமிழர்கள் உட்பட 16 பேர் கைது.

Lankathas Pathmanathan

Leave a Comment